search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலையன்கரிசல் கூட்டுறவு அதிகாரிகள்"

    குலையன்கரிசல் கூட்டுறவு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
    முள்ளக்காடு:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. தொண்டரணி துணைஅமைப்பாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி குலையன் கரிசல் கிராமம் போடம்மாள்புரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கூட்டுறவு அதிகாரிகள் சிலர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகள் என பெயர் பலகையை வங்கி செயலாளர் வைத்துள்ளார். 

    எனவே நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டுள்ள குலையன்கரிசல் கூட்டுறவு அதிகாரிகள் மீது தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.வின் மூத்த வக்கீல்களின் ஆலோசனைகளின்படி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×